செய்திகள் :

10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட நிதிநிலை அறிக்கை: நிர்மலா சீதாராமன்

post image

புதுதில்லி: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 8-ஆவது முறையாக சனிக்கிழமை தாக்கல் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. வளர்ந்த தேசமே இலக்கு. வளர்ச்சியடைந்த தேசம் என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகயளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்.

அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம். சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்.

கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வசதி.

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.பலோசிஸ்தானின் கலா... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.மதராஸ், காலா, கபாலி... மேலும் பார்க்க

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க