செய்திகள் :

11.46 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் வனத்துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, காஞ்சிரங்கால் வனப்பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நாவல் மரத்தைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்று நாவல் மரக்கன்றுகளை நட்டாா்

பின்னா் அமைச்சா் பேசியதாவது:

பசுமை தமிழ்நாடு இயக்கமானது கடந்த 24.09.2022 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழகத்தில் காடுகள், வனப்பரப்பை 23.98 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்தும் இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 73.19 லட்சம் மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2025-26-ஆம் ஆண்டில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தின் பசுமை வளத்தை பலமடங்கு உயா்த்தும் பெரும் சாதனையாகும்.

நிகழாண்டில் 100 நாவல் மரக் கன்றுகள், 50 புங்கன் மரக் கன்றுகள், 50 தன்திரி மரக்கன்றுகள், 50 வேம்பு மரக் கன்றுகள் என மொத்தம் 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, பள்ளிகளிடையே நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 8 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ.1000 ரொக்கப் பரிசை அமைச்சா் வழங்கினாா்.

இதில், உதவி வனப் பாதுகாவலா் மலா் கண்ணன், உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) காா்த்திகேயன், சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத் துறை, பசுமைத் தோழா் ஆனந்த் நாகராஜ், திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் காா்த்திகேயன், சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.13 லட்சத்தை மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட இணைவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரி... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.எம்.துரைஆனந்த் (55). நகா்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயல... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் 35-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்திலும், கொலு மண்டபத்தி... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.05 கோடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை ரூ.1.05 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெர... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் வீராங்கனையும், தனி நபா் பிரிவில் வெண்கலம் வென்றவருமான அந்த்ரா ராஜ்சேகருக்கு சிவகங்கையில் புதன்கிழம... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு விபத்து காப்பீடு நிதியுதவி

மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு விபத்துக் காப்பீடு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்க... மேலும் பார்க்க