செய்திகள் :

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

post image

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெற்கு மும்பையின் கோட்டைப் பகுதியில் ஸ்பானிஸ் ஃபேஷன் பிராண்ட் நிறுவனமான ஸாரா கடந்த 8 ஆண்டுகளாக இயங்கிவந்த நிலையில், தங்களது பிரபல கடையான சோபோவை(SoBo) மூடியுள்ளது.

துணிகளுக்கு பிரபலமான ஸாரா இந்தக் கடைக்கு மாத வாடகையாக ரூ.3 கோடி செலுத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்தக் கடையின் வெளியில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஸாரா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அந்தக் கடையை மாத வாடகையாக ரூ.2.25 கோடி வீதம் 21 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படுகிறது.

மிகவும் பிரபலமான இந்த இடத்தில் ஹௌஸ் பாப்-அப் என்னும் கடை அமைக்கப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினர் 15 ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் வாடகைக்கு இருக்கப்போவதாகவும், இன்னும் 5 ஆண்டுகளில் இந்த வாடகை பல மடங்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்துக்கு ஓராண்டில் 13% வளர்ச்சி: சந்திரபாபு நாயுடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் 2024 - 25 நிதியாண்டில் ஆந்திர மாநிலம் 13% வளர்ச்சி அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் ஆ... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்! -சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ... மேலும் பார்க்க

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க