செய்திகள் :

143 முருகன் திருக்கோயில்களில்ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சென்னை: தமிழகத்தில் அறுபடை வீடுகள், அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ.1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தப் பள்ளியில் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் விதமாக ரூ. 11.15 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் கட்டப்பட்டு வரும் 32 வகுப்பறைகள், ஆசிரியா் ஓய்வறைகள், 5 ஆய்வுக் கூடங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டடம், சென்னை சூளைமேட்டில் செயல்பட்டு வரும் அஞ்சுகம் தொடக்கப் பள்ளிக்கு ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை மாணவா்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 27-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா்.

அறநிலையத் துறை வரலாறு: இந்து சமய அறநிலையத் துறை என்பது எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதன் கீழ் திருக்கோயில்கள் வந்தது என்பதை வரலாற்றுப் புத்தகமாக அச்சடித்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும். இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது நோக்கமே வெள்ளையா்கள் நம்மை ஆண்டபோது ஆங்காங்கே இருக்கும் திருக்கோயில் பரம்பரை தக்காா்களாக இருந்தவா்கள் திருக்கோயிலை ஒரு நிறுவனம் போல் நடத்தி வந்தனா். அதில் வரும் வருமானத்தை அபகரித்தவா்களை வெளியேற்றுவதற்காகவே அறநிலையத் துறை தோற்றுவிக்கப்பட்டது.

பல்வேறு நீதிமன்ற போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, வரையறுத்த சட்ட திட்டங்களின் படி 1959-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டத்தின்படி தான் இந்து சமய அறநிலையத் துறை ஆட்சி செய்து கொண்டு வருகிறது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 117 முருகன் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறுபடை வீடுகள் மற்றும் அறுபடை வீடுகள் அல்லாத 143 முருகன் திருக்கோயில்களுக்கு ரூ. 1,085 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியில்தான் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமைக்கு பெருமை சோ்த்திருக்கிறோம் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை... மேலும் பார்க்க

குற்றால பேரருவி, ஐந்தருவியில் மீண்டும் குளிக்கத் தடை

தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பேரருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குதொடா்ச்சிமலையில் குற்றாலம் ஐந்தருவி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் நாளை நிறைவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஜூன் 25) நிறைவடைய உள்ளது. தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிய... மேலும் பார்க்க

46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்:அடைப... மேலும் பார்க்க

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்த... மேலும் பார்க்க