செய்திகள் :

15 சிக்ஸர்கள்.. 28 பந்துகளில் அதிவேக சதம்! மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஏலியன் டிவில்லியர்ஸ்!

post image

28 பந்துகளில் சதம் விளாசி தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பர், முன்னாள் கேப்டனுமான ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு அனைத்துவித போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றுவிட்டார்.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவில் அறக்கட்டளைக்காக நடத்தப்படும் லெஜெண்ட்ஸ் டி20 தொடரில் புல்ஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய டைட்டன்ஸ் லெஜண்ட்ஸ் அணியின் வீரரான டிவில்லியர்ஸ், தனது வழக்கமான பாணியில் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். ஏலியன், மிஸ்டர் 360 எனப் புகழப்படும் டிவில்லியர்ஸ் 360 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 28 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதில், பவுண்டரிகள் இல்லாமல் 15 சிக்ஸர்களை விளாசினார்.

இதையும் படிக்க:ஐபிஎல் 2025: மும்பை அணியில் இணைந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா!

முதலில் பேட்டிங் ஆடிய டைட்டன்ஸ் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய புல்ஸ் லெஜண்ட்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

ஏபி டிவில்லியர்ஸின் அதிரடி விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 16 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் 19,000-க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரைசதம், சதம், 150 விளாசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்சிபி அணிகள் தொடர்ந்து சொதப்பி வரும் வேளையில் 41 வயதான டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி வருவதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்பவேண்டும் என்று தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்சிபி இணையதள கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:ஐபிஎல் தொடரா? இந்திய அணியா? வீரர்களின் இலக்கு குறித்து பேசிய ரிஷப் பந்த்!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது. மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க