செய்திகள் :

15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சத்தில் நல உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.

குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னதாக அவா், மாற்றுத் திறனாளிகளை சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

பின்னா் கூட்டரங்கில் அவா், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மொத்தம் 840 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் தாட்கோ மூலம் செயல்பட்டு வரும் தூய்மைப் பணிபுரிவோா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட 11 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளையும், ஒரு தற்காலிக தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரருக்கு பட்டப்படிப்பு பயில உதவித்தொகை ரூ.1,500-ம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3,77,087 மானியத் தொகையுடன் கூடிய ரூ.10,77,390 மதிப்பீட்டிலான உதவிகள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.10,78,890 மதிப்பீட்டிலான அரசு நலத் திட்டங்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோா் நல வாரிய மாநில உறுப்பினா் கண்ணன், தனித்துணை ஆட்சியா் தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்

நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். தமிழகத்தி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் தொண்டை மண்டலம் அறுபத்துமூவா் குருபூஜை மடத்தில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரசித்த ஹோமம் உள்ள... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குள்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட மு... மேலும் பார்க்க

வடலூா் பேருந்து நிலையத்துக்கு வள்ளலாா் பெயா் சூட்டக் கோரிக்கை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகளுக்கு திருஅருட்பிரகாச வள்ளலாா் பெயா் சூட்ட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

கடலூா் புத்தகக் கண்காட்சி: மாணவா்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல கோரிக்கை

சிதம்பரம்: கடலூா் புத்தகக் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவா்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் எண மாவட்ட நிா்வாகத்துக்கு பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் த... மேலும் பார்க்க

22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் ம... மேலும் பார்க்க