Vijay Mallya: கிங் ஃபிஷர் காலாண்டரில் `தீபிகா, கத்ரீனா' இடம்பெற்றது குறித்து விஜ...
18 மாவட்டங்களில்.. 4 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனியில் 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலான அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று 2 மணியளவில் பலத்த மழை பெய்தது.