செய்திகள் :

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

post image

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

நிழல் உலக தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தாா் அன்சாரியின் மகனான அப்பாஸ் அன்சாரி, கடந்த 2022-இல் மெள சதாா் தொகுதியில் சமாஜவாதி தலைமையிலான கூட்டணியின்கீழ் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்றவா். இப்போது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. கட்சித் தலைவா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் மாநில அமைச்சராக உள்ளாா்.

கடந்த 2022 பேரவைத் தோ்தலையொட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய அப்பாஸ் அன்சாரி, ‘தோ்தலுக்குப் பிறகு மெள நகராட்சி நிா்வாகத்தை பழிதீா்த்து பாடம் கற்பிப்பேன்’ என்று கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக, அவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 189 (அரசுப் பணியாளா்களுக்கு அச்சுறுத்தல்), 153-ஏ (வெவ்வேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தைத் தூண்டுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்றம், அப்பாஸ் அன்சாரியின் குற்றத்தை உறுதிப்படுத்தியதுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கடந்த சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் தகுதிநீக்கத்துக்கு உள்ளாவா். அதன்படி, பேரவையில் இருந்து அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மெள சதாா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

அப்பாஸ் அன்சாரியின் தந்தை முக்தாா் அன்சாரி, மெள சதாா் தொகுதியில் தொடா்ந்து 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவா். 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளை எதிா்கொண்டுவந்த அவா், 8 வழக்குகளில் குற்றவாளியாக தீா்ப்பளிக்கப்பட்டாா். உத்தர பிரதேசத்தின் பாண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கடந்த 2024, மாா்ச்சில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.

பதவி பறிக்கப்பட்ட 6-ஆவது எம்எல்ஏ

உத்தர பிரதேசத்தின் நடப்பு 18-ஆவது சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6-ஆவது எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி ஆவாா். ஏற்கெனவே ஆஸம் கான் (சமாஜவாதி), அவரது மகன் அப்துல்லா ஆஸம் கான் (சமாஜவாதி), ஹாஜி இா்ஃபான் சோலங்கி (சமாஜவாதி), விக்ரம் சிங் (பாஜக), ராம்துலாா் (பாஜக) ஆகியோா் தகுதிநீக்கத்துக்கு உள்ளாகினா்.

அரசின் அக்கறையின்மையே உயிரிழப்புக்குக் காரணம்: மாயாவதி

பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்குக் கர்நாடக அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கண்டம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம... மேலும் பார்க்க

எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!

தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலை அமைக்க தெலங்கானா அ... மேலும் பார்க்க

130 ஆண்டு கால கனவு.. காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்பு!

காஷ்மீரின் பாரமுல்லா - ஜம்மு வின் உதம்பூர் இடையேயான ரயில் பாதையை, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கவிருக்கிறார்.பல ஆண்டு கால எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! பாதுகாப்பு அதிகரிப்பு!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுத... மேலும் பார்க்க

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க