2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்
தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். அவா்களில் 14,855 போ் தோ்ச்சி பெற்றனா்.
இதனிடையே, கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642-ஆக அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் பிப்.12 தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 4,585 மருத்துவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, அவா்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் பிப்.22 தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், தோ்வு செய்யப்பட்டுள்ள மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குகிறாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.