செய்திகள் :

2 டன் கஞ்சா அழிப்பு

post image

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, போதைப் பொருள்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகளவில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனா். பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்படுகின்றன.

இதன்படி, 187 வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,215 கிலோ கஞ்சா, 58 கிலோ சாராஸ், ஒரு கிலோ ஹெராயின், 14 கிலோ கஞ்சா சாக்லெட் ஆகியவை செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஆபத்தான ரசாயன பொருள்கள், மருத்துவக் கழிவுகளை அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக காவல் துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க