ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! ந...
2 டன் கஞ்சா அழிப்பு
தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, போதைப் பொருள்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகளவில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனா். பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்படுகின்றன.
இதன்படி, 187 வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,215 கிலோ கஞ்சா, 58 கிலோ சாராஸ், ஒரு கிலோ ஹெராயின், 14 கிலோ கஞ்சா சாக்லெட் ஆகியவை செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஆபத்தான ரசாயன பொருள்கள், மருத்துவக் கழிவுகளை அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழக காவல் துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.