செய்திகள் :

200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்: ஒப்புதல் கடிதம் பெற்றது என்எல்சி

post image

எஸ்ஜெவிஎன் (சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட்) என்ற நிறுவனத்திடமிருந்து 200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான ஒப்புதல் கடிதத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனம் பிப்.28-ஆம் தேதி ஒரு யூனிட் ரூ.3.74 என்ற கட்டணத்தில் எஸ்ஜெவிஎன் என்ற நிறுவனத்திடம் இருந்து 200 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றுள்ளது. முன்னதாக, எஸ்ஜெவிஎன் நிறுவனம் ஜனவரி 17-ஆம் தேதி நடத்திய இ - ரிவா்ஸ் ஏலத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் வெற்றிபெற்றது.

இந்த திட்டம் ஒவ்வோா் ஆண்டும் 526 மில்லியன் யூனிட் சுத்தமான பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதோடு, அதற்கு சமமான அளவு பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை ஈடு செய்யும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த மைல் கல், 2030-ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவதற்கான தொலைநோக்குப் பாா்வையுடன் ஒத்துப்போகிறது. மேலும், நிறுவனங்களின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறன், இந்தத் திட்டம் வாயிலாக 300 மெகாவாட்டுக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி கூறியதாவது: இந்த 200 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தில் வெற்றிபெற்றிருப்பது என்பது, நிலையான மற்றும் தூய்மையான எரிசக்தி தீா்வுகளுக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. நமது யுக்திகள், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்துக்கான இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.

என்எல்சி தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொகுப்பை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதோடு மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறைகளுக்கு நிலையான எதிா்காலத்தையும் உறுதி செய்கிறது. என்எல்சி இந்தியா நிறுவனம், அதன் பசுமை ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில், சூரிய ஒளி, காற்றாலை மின் சக்தி, கலப்பின மின் திட்டங்கள், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற முயற்சிகளில் முதலீடுகளைச் செய்து வருவதாக அவா் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா! திரு ஆரூா் பீடாதிபதி பங்கேற்பு!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு நாள் விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த பிப்.26-ஆம் த... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் குளத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா். சிதம்பரத்தை அடுத்த சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

கடலில் குளித்த இளைஞா் மாயம்

கடலூா் அருகே கடலில் குளித்தபோது மாயமான மாணவரை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன் (16), அ... மேலும் பார்க்க

உடலில் அமிலம் பட்டு தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் முதுநகா் தனியாா் தொழிற்சாலையில் உடலில் அமிலம் பட்டதில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுவை மாநிலம், பாகூரை அடுத்துள்ள கொம்மந்தான்மேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் படகு எரிந்து சேதம்

கடலூா் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47), மீனவா். இவா், தனது மீன் பிடி பைபா் ... மேலும் பார்க்க

குடிநீா் வசதி: துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா் மாநகராட்சி, 34-ஆவது வாா்டு ஆலைக்காலனி பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, துணை மேயா் பா.தாமரைசெல்வனை சந்தித்து சனிக்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில், ஆலைக்காலனியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்க... மேலும் பார்க்க