2024-ஆம் ஆண்டிற்கான 6-ஆவது தேசிய நீா் விருதுகள்: மத்திய ஜல்சக்தி அமைச்சகம் விண்ணப்பங்கள் கோரல்
2024 ஆம் ஆண்டிற்கான 6 ஆவது தேசிய நீா் விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த தேசிய விருதுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் அளிக்க தேசிய விருதுகள் இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இணைய தளங்கள் மூலம் விருதுகளை விண்ணப்பங்கள் சமா்ப்பிக்க நிகழாண்டு டிசம்பா் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களை ஆய்வு செய்து விருதுகளை ஜூரி கமிட்டி தோ்வு செய்யும். சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். எஞ்சிய ஏழு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பையும் பாராட்டுப் பத்திரமும் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த 7 பிரிவுகளில் முதல் பரிசு ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1.5 லட்சம், ரூ. 1 லட்சம் என வழங்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.