செய்திகள் :

2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும்

post image

புது தில்லி: வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறோம். அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

வரிவிதிப்பு மற்றும் நிதித் துறை உட்பட ஆறு களங்களில் "மாற்றத்தக்க சீர்திருத்தங்களை" தொடங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளின் அரசாங்கத்தின் வளர்ச்சி சாதனை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியை பாதுகாத்தல், சமூகம் மற்றும் தொழில்துறையை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்திக்கான செலவினத்தை அதிகரித்தல் என்று அவர் கூறினார்.

வறுமையை ஒழித்தல், குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தரமான கல்வியை உறுதி செய்தல், குறைந்த மற்றும் விரிவான சுகாதார சேவையை வழங்குதல், வேலைவாய்ப்புடன் திறமையான பணியாளர்களை உருவாக்குதல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை 70 சதவிகிதமாக அதிகரித்தல், இந்தியாவின் விவசாயத் துறையை "உலகின் உணவு மையமாக" உருவாக்க மேம்படுத்துதல், பொருளாதார அதிகாரமளித்தல், தொழில்துறை முன்னேற்றம் மற்றும் சமூக நலவாழ்வில் கவனம் செலுத்தி, நாட்டின் வளளர்ச்சிக்கு பட்ஜெட் தெளிவான பாதையை அமைக்கிறது. வலுவான சாதனைப் பதிவு மற்றும் லட்சிய இலக்குகளுடன், வரும் ஆண்டுகளில் நாட்டை அதிக செழிப்பை நோக்கி நகர்த்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடு... மேலும் பார்க்க

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்த... மேலும் பார்க்க

சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர்!

நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நடப்பாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன... மேலும் பார்க்க

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவர... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?

மத்திய பட்ஜெட் ஓர் அரசியல் நிகழ்வு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1)... மேலும் பார்க்க