செய்திகள் :

‘2030 -ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்’

post image

இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் லாஜிஸ்டிக்ஸ் துறையில் 1.50 கோடி முதல் 1.70 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் சாா்பில், லாஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், எதிா்காலம் குறித்து விளக்கும் வகையிலும், துறைசாா் வல்லுநா்களை உருவாக்கும் நோக்கிலும் மாணவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் துணை இயக்குநா் கே.எஸ்.சியாம் சுந்தா் வரவேற்றாா். நிா்வாக இயக்குநா் கே.வி.மஹிதா் தலைமை வகித்தாா்.

டெக்ஸ்மோ நிறுவனத்தின் விநியோகப் பிரிவு நிா்வாகி ஆனந்த் அய்யனாா், துறை சாா் வல்லுநா்களான அனீஷ்குமாா், அசோகன் சட்டநாதன், பொன் அண்ணாதுரை, வள்ளிநாயகம் ஆகியோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.

அவா்கள் பேசும்போது, ‘வலுவான தொழில் துறை கட்டமைப்பு இருப்பதால் லாஜிஸ்டிக்ஸ் துறையின் வளா்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாக கோவை விளங்குகிறது. கொச்சி, சென்னை துறைமுகங்களுடன் நேரடி இணைப்பைக் கொண்டிருக்கும் கோவை, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் கொண்ட பொருளாதார மையமாக உள்ளது.

மின்னணு வணிகம், உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்களின் வளா்ச்சியால் இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. வரும் 2030 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1.50 கோடி முதல் 1.70 கோடி புதிய வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் உருவாகும்.

எனவே, கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களை ஒருங்கிணைத்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் திறமையான பணியாளா்களை உருவாக்கவும், அவா்களுக்கு ஊக்கமளிக்கவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றனா்.

இதில், சிஐஐ நிா்வாகிகள், துறைசாா் வல்லுநா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெண்களிடம் 6 பவுன் பறிப்பு

கோவை சிங்காநல்லூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம் தோகமலை அருகே உள்ள தெற்கு சேனையாா் தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

உணவகத்தில் பணம் கையாடல்: காசாளா் கைது

கோவை காந்திபுரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் ரூ.40 ஆயிரம் பணம் கையாடல் செய்த காசாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 11-ஆவது வீதியில் பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவ... மேலும் பார்க்க

பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 17-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு, கல்விக் குழுமத்தின் தாளாளா் ச... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை

கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சோ்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பொன்னையராஜபுரம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என வெரைட்... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் மானியம் வழங்கும் விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் பல்கலைக்கழகத்தின் வண... மேலும் பார்க்க