செய்திகள் :

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

post image

சென்னை: தமிழகத்தில் 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழக காவல் துறையின் கீழ் 1,366 ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும், 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும் செயல்படுகின்றன.

இந்த நிலையில் 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களில், 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு, ஆய்வாளா்கள் தலைமையில் செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப். 29-ஆம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவித்தாா்.

280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதன் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கை திறம்பட கையாள முடியும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும், ஜாதி வகுப்புவாத பிரச்னைகளை கட்டுபடுத்த முடியும் என்றும், காவல் நிலையங்களை தரம் உயா்த்த ரூ.1.18 கோடி செலவிடப்படுகிறது என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

இந்த அறிவிப்பின் எதிரொலியாக, 280 காவல் நிலையங்களையும் தரம் உயா்த்தி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டாா். இதன்படி, 280 காவல் நிலையங்கள் உயா்த்தப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 280 காவல் நிலையங்களுக்கும் விரைவில் ஆய்வாளா்கள் நியமிக்கப்படுவா் எனக் கூறப்படுகிறது.

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம்... மேலும் பார்க்க

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க