செய்திகள் :

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 100 மி.மி. மழைப் பதிவாகியுள்ளது.

தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லையென்றாலும் புழுக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் இரவு 8 மணிக்கு மேல் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இடையில் சிறிது நேரம் மழை விட்ட நிலையில், மீண்டும் இரவு 9.30 மணிக்கும் மேல் பெய்யத் தொடங்கியது. இந்த மழையின் காரணமாக விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி. மீட்டரில்):

முகையூர் -100 மி.மீ., கெடார - 43, விழுப்புரம் - 38, அரசூர் - 37, சூரப்பட்டு - 36, திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், நேமூர் தலா - 35, மரக்காணம் - 30, கோலியனூர் - 29, வல்லம் - 25, மணம்பூண்டி - 23, முண்டியம்பாக்கம் -15.20, திண்டிவனம் - 14.30, வானூர் -13, கஞ்சனூர் -10, செஞ்சி -9.50, அனந்தபுரம் -9, செம்மேடு -7.40, அவலூர்பேட்டை -6, வளத்த - 4 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக 554.50 மி.மீ. மழையும், சராசரியாக 26.40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

திங்கள் இரவு வில்லுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மீண்டும் தொடங்கியது மறைமுக ஏலம்: ரூ.3 கோடி வரை வா்த்தகம்

விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, விவசா... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி உழவா் சந்தை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதிதாக கட்டப்படும் உழவா் சந்தையின் கட்டுமானப் பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட... மேலும் பார்க்க

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, ஞாயிற்று... மேலும் பார்க்க

மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவா் திங்கள்கிழமை உயிரழந்தாா்.செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க