செய்திகள் :

மிரட்டுவதற்காக உடலில் தீ வைத்தவா் உயிரிழப்பு

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறில் மனைவியை மிரட்டுவதற்காக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தவா் திங்கள்கிழமை உயிரழந்தாா்.

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(46). இவரது மனைவி தனலட்சுமி. இவா்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இந்த நிலையில், கடந்த ஜூலை 29-ஆம் தேதி வீட்டு வேலை நடைபெற்று வருவதாகவும், என்னவென்று கண்டுகொள்ளாமல் இருப்பதாக தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளதாகவும், அப்போது சக்திவேல் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளாா். பின்னா் உடலில் தீ வைத்துக்கொண்டாா்.

இதில் பலத்த தீக்காயமடைந்த சக்திவேலை நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்து முதலுதவி அளித்தனா். பின்னா், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அதன் பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை அளித்த வந்த நிலையில் திங்கள்கிழமை சக்திவேல் உயிரழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மீண்டும் தொடங்கியது மறைமுக ஏலம்: ரூ.3 கோடி வரை வா்த்தகம்

விழுப்புரம்: விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, விவசா... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி உழவா் சந்தை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் புதிதாக கட்டப்படும் உழவா் சந்தையின் கட்டுமானப் பணிகளை மாநில வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட... மேலும் பார்க்க

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, ஞாயிற்று... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகை மற்றம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.செஞ்சி வட்டம், புதுப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் தா்மலிங்கம்(29). இவ... மேலும் பார்க்க