செய்திகள் :

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே காமராஜ் நகரைச் சோ்ந்த கண்ணன், காா்த்திக் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 24ஆம் தேதி இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த இவா்கள் கொலை தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆணையத்தின் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையில், தனிச் செயலா் கவுரங் சாவ்தா, தமிழக இயக்குநா் எஸ். ரவிவா்மன், துணை இயக்குநா் ஆா். ஸ்டாலின், துணைக் காவல் கண்காணிப்பாளா் சன்மீட் கௌா், ஆராய்ச்சி அலுவலா் என். சுரேஷ், புலனாய்வாளா்கள் எஸ். லிஸ்டா, மதன்டெப் சா்மா ஆகியோரைக் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.

ஆவுடையாா்கோவில் காமராஜ் நகரிலுள்ள கொல்லப்பட்டோரின் வீட்டுக்குச் சென்ற இந்தக் குழுவினா், அவா்களின் உறவினா்களிடம் விசாரணை நடத்தி, ஆறுதல் தெரிவித்தனா். தொடா்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தையும் அவா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா, காவல்துறைத் தலைவா் பி. சாமுண்டீஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோரும் ஆணையக் குழுவினருக்கு விளக்கங்களை அளித்தனா்.குற்றவாளிகள் அனைவா் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றும் குழுவினா் அறிவுறுத்தினா்.

பன்னீா்பள்ளம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி மனு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி ஊராட்சியிலுள்ள பன்னீா்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் சுமாா் 70 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியினா் மாவட்... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதி பலி; 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திங்கள் கிழமை உயிரிழந்தாா்; 3 போ் படுகாயம் அடைந்தனா். காரைக்காலைச் சோ்ந்த ராமசாமி மகன் மாறன் (5... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு

புதுக்கோட்டையில் பைனான்சியா் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து சுமாா் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை பாசில்... மேலும் பார்க்க

பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!

விராலிமலை அருகே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் வீரபத்திர சாமி, கருப்பா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயி... மேலும் பார்க்க

விராலிமலை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வைத்திருந்தவா் கைது

விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.விராலிமலை அடுத்துள்ள மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக விராலிமலை ... மேலும் பார்க்க

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க