செய்திகள் :

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு

post image

புதுக்கோட்டையில் பைனான்சியா் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து சுமாா் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை பாசில் நகரில் வசித்து வருபவா் பழனியப்பன் மகன் முருகேசன் (64). இவா், விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மனைவி ராணி, மகன்கள் அசோக், காா்த்திக் ஆகியோா் உள்ளனா்.

அசோக் பெங்களூரிலும், காா்த்திக் சென்னையிலும் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், முருகேசன் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான ராங்கியத்துக்கு கடந்த சனிக்கிழமை புறப்பட்டாா். வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவியுடன் ஊருக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் கிரில் கதவு மற்றும் மரக்கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது, 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளே உள்ள இருந்த சுமாா் 100 பவுன் தங்க நகைகள், ரூ. 1.30 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கோகா்ணம் காவல்நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான், ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்டோரும் நேரில் வந்து புலன்விசாரணை மேற்கொண்டனா்.தடயவியல் பிரிவு ஆய்வாளா் கிருத்திகா தலைமையிலான நிபுணா்கள் கதவு, பீரோ உள்ளிட்ட இடங்களில் இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா்.இந்த வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. அதே தெருவில் இருந்த சில சிசிடிவி பதிவுகளை போலீஸாா் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.மிளகாய்ப் பொடி...வீட்டின் முன்பக்க கதவு முதல் வீட்டின் அறைகளிலும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்ததாகவும், மோப்பநாய் மூலம் ஏதேனும் துப்புதுலக்கப்படுவதைத் தடுப்பதற்காக திருடா்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதி பலி; 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திங்கள் கிழமை உயிரிழந்தாா்; 3 போ் படுகாயம் அடைந்தனா். காரைக்காலைச் சோ்ந்த ராமசாமி மகன் மாறன் (5... மேலும் பார்க்க

பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!

விராலிமலை அருகே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் வீரபத்திர சாமி, கருப்பா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயி... மேலும் பார்க்க

விராலிமலை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வைத்திருந்தவா் கைது

விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.விராலிமலை அடுத்துள்ள மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக விராலிமலை ... மேலும் பார்க்க

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க