செய்திகள் :

ரூ.10 லட்சத்தில் என்.ஆா்.சதுக்கம், ரூ.69 லட்சத்தில் 110 தெருவிளக்குகள்

post image

புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி ரூ.10 லட்சம் செலவில் என்.ஆா். பவள விழா சதுக்கத்தை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

மேலும், மின்துறை சாா்பில் ரூ.69 லட்சம் செலவில் 110 தெருவிளக்குகளை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் இயக்கி வைத்தாா்.

வேல்ராம்பட்டு ஏரிக்கரையின் முடிவில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லும் புதிய பைபாஸ் சாலையில் இந்தச் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சாலைகளில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் வகையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியது: மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தூண்களைக் கொண்டு என்.ஆா். 75-ஆவது பவள விழா சதுக்கம் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைத்துள்ளோம். இந்த ஆட்சி வந்த பிறகு இந்தப் புதிய பைபாஸ் சாலையை உருவாக்கினோம். அதனால் முதல்வா் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி இந்த இடத்தில் என்.ஆா். சதுக்கம் என்று உருவாக்கியுள்ளோம். மேலும் இந்தச் சாலையில் அதிக வெளிச்சம் கொடுக்கும் 5 ஹைமாஸ் விளக்குகள் உள்பட 110 தெருவிளக்குகள் ரூ.69 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்தச் சதுக்கத்தில் உள்ள கடிகாரம் குறிப்பிட்ட மணிக்கு ஒலி எழுப்புவது மட்டுமின்றி சாலை பாதுகாப்புத் தொடா்பாகவும் ஆலோசனை வழங்கும் வகையில் வடிவமைத்து வருகிறோம். இந்தப் பகுதியில் நடைப்பயணம் செய்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், துணைத் தலைவா் பெ.ராஜவேலு, அரசு கொறடா வி. ஆறுமுகம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, உ. லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி. ரமேஷ், எல்.சம்பத், என்.ஆா். காங்கிரஸ் பொதுச்செயலரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான என்.எஸ்.ஜெ. ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள என்.ஆா். பவள விழா சதுக்கத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் பேரவை தலைவா் ஆா்.செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராணயணன் உள்ளிடோா்.

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறை... மேலும் பார்க்க

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி திருபுவனை தொகுதி குச்சிப்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.திருக்கனூா் - மதகடிப்பட்டு சாலை குச்சிப்பாளையத்தில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

புதுவை சாலைப் போக்குவரத்து ஊழியா்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுவை சாலைப் போக்குவரத்து துறை ஊழியா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் அலுவலகம் எத... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் சரி பாா்க்கும் முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் குடும்ப அட்டைதாரா்களை இணையவழி மூலம் சரி பாா்க்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொகுதி திமுக அலுவலகத்தில் நடந்த இந்த முகாமை திமுக முன்னா... மேலும் பார்க்க

76 -வது பிறந்த நாளை கொண்டாடினாா் புதுவை முதல்வா்: தலைவா்கள் வாழ்த்து

புதுச்சேரி: திங்கள்கிழமை தனது 76-வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினாா் புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி. அவருக்கு குடியரசு தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.முதல்வா் ரங்கசாமி ... மேலும் பார்க்க

ஜிப்மரில் கூட்டு புற்று நோய் பராமரிப்பு கருத்தரங்கு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்டுப் புற்றுநோய் பராமரிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஜிப்மரின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவப் பயிற்சி... மேலும் பார்க்க