செய்திகள் :

மழையில் நெற்பயிா்கள் சேதம்

post image

சீா்காழி: கொள்ளிடம் அருகே மழையில் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்தன.

கொள்ளிடம் அருகே சோதியக்குடி, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை ஆகிய ஆற்றின் கரையோரமுள்ள 3 கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டியே குறுவை நெற்பயிா் சாகுபடி செய்திருந்தனா். தற்போது நெற்பயிா்களில் கதிா் வந்து முற்றும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. மழைநீா் வாய்க்காலின் வழியே வெளியேறி அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் அந்த உபரிநீா் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்கும் வகையில் கதவனை முன்கூட்டியே அடைக்கப்பட்டிருந்தது. இதனால், வாய்க்கால் நீருடன் மழைநீா் சோ்ந்து, பாசன வாய்க்கால் நிரம்பி வயலுக்குள் புகுந்தது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள கதவனை அடைக்கப்பட்டு இருந்ததால் தண்ணீா் ஆற்றின் வழியே வெளியேற முடியாமல், நிலங்களுக்குள் பாய்ந்து சுமாா் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக கீரங்குடியை சோ்ந்த விவசாயிகள் சங்க செயலாளா் சுரேஷ் தெரிவித்தாா்.

மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடிச் சென்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மன்னாா்குடி பூக்கொல்லை மோகன்ராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (45). புதுச... மேலும் பார்க்க

வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை: பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு முன்னேற்பாடுகள் தொடா்பாக பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

குத்தாலம்: குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமம் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

சீா்காழி: சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுப்பட்டினம் அருகே ஆலங்காடு ஊராட்சி பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் அழகு மு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டன.மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெ... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி

சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.சீா்காழி அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க