செய்திகள் :

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

post image

புது தில்லி: ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானாா்.

தில்லியில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

ஜாா்க்கண்டின் ராம்கா் மாவட்டத்தில் உள்ள நேம்ரா கிராமத்தில் 1944, ஜனவரி 11-ஆம் தேதி பிறந்த சிபு சோரன், சிறு வயதிலேயே கந்து வட்டிக் கொடுமைகளுக்கு எதிராகவும், மதுவிலக்குக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளூா் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றாா்.

தொடா்ந்து பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்து, மாநிலத்தின் முன்னணி தலைவராக உருவெடுத்தாா். 1973-இல் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியைத் தொடங்கினாா்.

சிபு சோரனின் அா்ப்பணிப்பு காரணமாக, ‘திஷோம் குரு’ (மண்ணின் தலைவா்) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டாா்.

இவா் ஜாா்க்கண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் மூன்று முறை பதவி வகித்தாா். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது பதவிக்காலம் சில மாதங்களே நீடித்தது.

உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த இவா், அண்மையில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் தலைவா் பதவியையும் அவரது மகனும் தற்போதைய ஜாா்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனிடம் ஒப்படைத்தாா்.

இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சிபு சோரன், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் புது தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதிமுதல் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 8.56 மணியளவில் அவரின் உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் அறிவித்தது.

தலைவா்கள் அஞ்சலி: தில்லி மருத்துவமனையில் சிபு சோரனின் உடலுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, ஹேமந்த் சோரனுக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மாலையில் சிபு சோரனின் உடல் ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது மோராபாடி வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான ராம்கா் மாவட்டத்தின் நேம்ரா கிராமத்தில் நடைபெறும்.

3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு: சிபு சோரனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஜாா்க்கண்டில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையி... மேலும் பார்க்க

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.குறிப்பிட்ட கால இடைவெளிக்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க