செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடிக்கு மாலை அணிவித்தபோது, எம்பிக்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவ் என்று முழக்கம் எழுப்பினர்.

மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்திய பாதுகாப்புப் படையின் துணிச்சலைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Operation Sindoor: MPs congratulate Modi with slogans of Hara Hara Mahadev

இதையும் படிக்க : ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில... மேலும் பார்க்க

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்குகளில்... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்... மேலும் பார்க்க