செய்திகள் :

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

post image

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் திங்கள்கிழமை காலமானாா்.

புது தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மறைந்த அவரின் உடலுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சிபு சோரனின் உடல் நேற்று மாலை ராஞ்சிக்கு கொண்டு வரப்பட்டு, அவரது மோராபாடி வீட்டில் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மாநில பாஜக மூத்த தலைவரும், சிபு சோரனின் நெருங்கிய நண்பருமான சம்பயி சோரன் செவ்வாய்க்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மாநில சட்டப்பேரவை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிபு சோரனின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு மேல் அவரது சொந்த ஊரான ராம்கா் மாவட்டத்தின் நேம்ரா கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன.

முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், 3 நாள்கள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Shibu Soren's body to be cremated with full state honours today

இதையும் படிக்க : ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில... மேலும் பார்க்க

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்குகளில்... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையி... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 -ஆவது பிரிவை ரத்... மேலும் பார்க்க