செய்திகள் :

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

post image

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் தில்லியில் நடத்தப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மனு தாக்கல் தொடங்கும் நாளான ஆக. 7ஆம் தேதிக்கு சில தினங்களுக்கு முன்பு இக்கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளரை நிறுத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அதன் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று கருதப்படுகிறது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற இரு நாள் விவாதத்தைத் தவிர, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முற்றிலும் முடங்கியுள்ள சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு அனுகூலமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தச் சூழலில் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததற்காக பிரதமரை ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் பாராட்டிப் பேசுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட மசோதாக்கள் அரசு நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி செவ்வாய்க்கிழமை முதல் இந்த மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே நிறைவேற்ற அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

A meeting of MPs from the ruling BJP-led National Democratic Alliance (NDA) has begun. Prime Minister Narendra Modi is scheduled to address the meeting.

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில... மேலும் பார்க்க

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்குகளில்... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையி... மேலும் பார்க்க

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்ச... மேலும் பார்க்க