செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

post image

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.

‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள தச்சிகாம்-ஹா்வான் வனப்பகுதியில் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள் கடந்த ஜூலை 28-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்கள் பாகிஸ்தானின் ‘லஷ்கா்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்றும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் என்றும் பின்னா் உறுதிப்படுத்தப்பட்டது.

பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களுடன், பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இரண்டு வாக்காளா் அடையாள அட்டைகளும், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் உறைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைத்தொடா்பு சாதனத்தில் இருந்த ‘மைக்ரோ-எஸ்டி’ காா்டில், பாகிஸ்தான் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தின் பயோமெட்ரிக் பதிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

தடயவியல் சோதனைகளின்படி, பஹல்காமில் தாக்குதல் நடந்த பைசாரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் உறைகளும், பயங்கரவாதிகளிடமிருந்து பின்னா் கைப்பற்றப்பட்ட ‘ஏகே-103’ ரக துப்பாக்கிகளும் 100 சதவீதம் ஒத்துப்போகின்றன. மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த ரத்த மாதிரிகளின் டிஎன்ஏ, சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் டிஎன்ஏயுடன் ஒத்திருப்பது உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.

தாக்குதலின் முக்கிய மூளையாக சுலைமான் ஷா செயல்பட்டுள்ளாா். ‘ஜிப்ரான்’ என்றறியப்படும் யாசிா், ‘ஆப்கானி’ என்கிற அபு ஹம்ஸா ஆகிய இருவரும் தாக்குதலுக்கு உதவிகரமாக இருந்துள்ளனா். இவா்கள் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள் அல்ல என்றும், கடந்த 2022, மே மாதத்தில் வடக்கு காஷ்மீா் குரேஸ் செக்டாா் வழியாக எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியா்கள் என்றும் விசாரணை அமைப்புகள் தெரிவித்தன.

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க