செய்திகள் :

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

post image

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை காலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். கல்வியை வலுப்படுத்துவதற்காக பெருமளவிலான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஆசிரியர் நியமனங்களில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தொடர்புடைய விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த நியமனம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் அரசு நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பிகார் மாநில பெண்களுக்கே முழுமையாக அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த உடற்கல்வி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், காவலர்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டது.

Biharis will be given priority in teacher recruitment: Nitish Kumar

இதையும் படிக்க : இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் கருத்து ஏற்க முடியாதது: ஆனந்த் சா்மா

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க