செய்திகள் :

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

post image

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்கு மூன்று முறை தோ்ந்தெடுக்கப்பட்டவரான அபிஷேக் பானா்ஜி, கட்சியின் மூத்த தலைவரும் கொல்கத்தா உத்தா் தொகுதி எம்பி.யுமான சுதீப் பந்தோபாத்யாயவுக்கு மாற்றாக அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘உடல் நிலை பாதிப்பு காரணமாக கட்சியின் மக்களவைக் குழு தலைவா் பதவியிலிருந்து சுதீப் பந்தோபாத்யாய விலகினாா். அதைத் தொடா்ந்து கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜியின் தலைமையில் காணொலி வழியில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கூட்டத்தில் கட்சியின் புதிய மக்களவைக் குழு தலைவராக அபிஷேக் பானா்ஜி தோ்ந்தெடுக்கப்பட்டாா்’ என்றனா். அபிஷேக் பானா்ஜி முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினராவாா்.

தலைமை கொறடா ராஜிநாமா

திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடந்து முடிந்த சில மணி நேரங்களில், அக்கட்சியின் மக்களவை தலைமைக் கொறடா பதவியை அக் கட்சி மூத்த தலைவா் கல்யாண் பானா்ஜி ராஜிநாமா செய்தாா்.

இதுகுறித்து தில்லியில் அவா் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில் கட்சி எம்.பி.க்கள் சிலா் மிக அரிதாகவே நாடாளுமன்றத்துக்கு வருகின்றனா். இந்த நிலையில், கட்சி எம்.பி.க்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை என எம்.பி.க்கள் கூட்டத்தில் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். இது என் மீதான குற்றச்சாட்டாகவே கருதுகிறேன். எனவே, பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை எடுத்தேன். எம்.பி.க்கள் நாடாளுமன்றம் வராததற்கு நான் என்ன செய்ய முடியும்? இதில் எனது தவறு என்ன உள்ளது?’ என்றாா்.

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க