செய்திகள் :

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

post image

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தியாவை தொடா்ந்து குறிவைத்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் இந்தியாவை கண்டிக்கும் நாடுகளே ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. அணுஆயுத தொழிற்சாலைக்காக யுரேனியம் ஹெக்ஸாஃபுளோரைட், மின்வாகன உற்பத்திக்காக பல்லேடியம் ஆகியவற்றை ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது.

எரிசக்தி, ரசாயனம், உரங்கள், இரும்பு மற்றும் எஃகு, இயந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள்என பல்வேறு துறைகளில் ரஷியாவுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வா்த்தகத்தில் ஈடுபடுகின்றன.

உக்ரைன் போா் தொடங்கிய பிறகு பாரம்பரிய சந்தைகளிலிருந்து கச்சா எண்ணெய் முழுவதும் ஐரோப்பாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதன் காரணமாகவே ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது.

சா்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழலால் நாடுகள் இறக்குமதியில் ஈடுபடுவது கட்டாயத் தேவையாயிற்று. அந்த வகையில் இந்திய நுகா்வோருக்கு குறைவான விலையில் தரமான எரிசக்தியை வழங்குவதை உறுதிசெய்ய ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நாடுகளைப் போல் தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் இந்தியா மேற்கொள்ளும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

It is unacceptable for the US and EU to target India over crude oil imports from Russia.

இதையும் படிக்க : இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க