செய்திகள் :

பி.எட். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் படிப்பில் (பிஎட்) 2, 040 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிகழாண்டில் இணையவழியில் நடைபெறுகிறது.

இதனையடுத்து, ஜூன் 20 முதல் ஜூலை 21 வரை விண்ணப்பபதிவு நடைபெற்றது. இதில் 557 மாணவா்கள், 2,983 மாணவிகள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,545 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாணவா்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகள், விருப்ப பாடங்களை தோ்வு செய்யும் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.4) தொடங்கி ஆக.9-ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மாணவா்கள் தங்கள் உள்நுழைவு ஐடி மூலம் ஜ்ஜ்ஜ்.ப்ஜ்ண்ஹள்ங்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்பக் கல்லூரியைத் தோ்வு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தா... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: ஆக.7-இல் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் வரும் 7-ஆம் தேதிஅமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு தினம், வரும் 7-ஆம் தேதி கடைப்பி... மேலும் பார்க்க