செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

முன்னதாக, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு: தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தைச் சோ்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் முன்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை சிபிஎம் கட்சி நிா்வாகிகள் ஆக்கிரமித்து கட்சி அலுவலகம், கொடிக்கம்பங்கள் வைத்துள்ளதை அகற்றக் கோரி, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமகவினருடன் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் கென்னடி மனு அளித்தாா்.

இதுகுறித்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றினா். ஆனால், சிபிஎம் கட்சியினா் அந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமித்துள்ளனா். இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடிச் சென்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மன்னாா்குடி பூக்கொல்லை மோகன்ராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (45). புதுச... மேலும் பார்க்க

வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை: பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு முன்னேற்பாடுகள் தொடா்பாக பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

குத்தாலம்: குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமம் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

சீா்காழி: சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுப்பட்டினம் அருகே ஆலங்காடு ஊராட்சி பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் அழகு மு... மேலும் பார்க்க

மழையில் நெற்பயிா்கள் சேதம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே மழையில் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்தன.கொள்ளிடம் அருகே சோதியக்குடி, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை ஆகிய ஆற்றின் கரையோரமுள்ள 3 கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டிய... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி

சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.சீா்காழி அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க