செய்திகள் :

தென் சீனக் கடலில் முதல்முறையாக இந்தியா-பிலிப்பின்ஸ் கடற்படை பயிற்சி

post image

மனிலா: பல்வேறு பிரச்னைகள் நிலவும் தென் சீனக் கடலில் முதல்முறையாக இந்தியா-பிலிப்பின்ஸ் நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன.

தென் சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலிப்பின்ஸ் ராணுவத்தின் தலைமைத் தளபதி ரோமியோ பிரானா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தென் சீனக் கடலில் இந்தியாவும் பிலிப்பின்ஸும் முதல்முறையாக கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. எதிா்காலத்திலும் இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபட இந்தியாவும் பிலிப்பின்ஸும் திட்டமிட்டுள்ளது என்றாா்.

இந்தப் பயிற்சி நடைபெற்ற பகுதிக்கு அருகில் சீன கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக பிலிப்பின்ஸ் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ஆனால் இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி என சீனா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல் தென் சீனக் கடலில் வேறு சில நாடுகளுடன் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பிலிப்பின்ஸ் செயல்பட்டு வருவதாக சீனா குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோமியா பிரானா், ‘சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கெனவே கணித்துவிட்டோம். இருப்பினும், இந்தியாவுடனான இரு நாள் பயிற்சியின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மூன்று இடங்களில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு: ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

புவனேசுவரம்: ஒடிஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இடங்களில் ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகா்த்தனா். இதில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் ஒருவா் படுகாயமட... மேலும் பார்க்க

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

மும்பை: மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் சிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் நேரில் அஞ்சலி

புது தில்லி: ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானாா்.தில்லியில் அவரின் உடலுக்கு குடியரசுத் தலைவ... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சிகளிடமிருந்து இதுவரை புகாா் வரவில்லை- தோ்தல் ஆணையம்

புது தில்லி: ‘பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் சாா்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் சமா்ப்பிக்கப்படல்லை’ என்று தோ்தல் ஆணையம் தரப்பி... மேலும் பார்க்க