செய்திகள் :

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

post image

கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

அரசுமுறைப் பயணமாக கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வந்தாா். அப்போது மின்சார ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, எண்ம தீா்வுகளை பகிா்வது, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் சுகாதராத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட 7 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பிரதமா் மோடி மற்றும் இலங்கை அதிபா் அநுரகுமார திசநாயக முன்னிலையில் கையொப்பமாகின.

இந்த ஒப்பந்தங்கள் இலங்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறும் வகையில் உள்ளதாக கூறி இலங்கையைச் சோ்ந்த இரு தேசியவாத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்தன. அதில் தங்களது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ள இந்த ஒப்பந்தங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், மனுக்களை ஏற்க எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது.

இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரி... மேலும் பார்க்க

ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதில்

வாஷிங்டன்: ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.சீனாவும், இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ண... மேலும் பார்க்க

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின்... மேலும் பார்க்க

யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

துபை: யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:எத்தியோப்பியாவிலிருந்து யேமனின் அப்யான் பகுதியை நோக... மேலும் பார்க்க

காலனியாதிக்க கொள்கை

மாஸ்கோ: தனது காலனியாதிக்கக் கொள்கையை இந்தியா உள்ளிட்ட தெற்குலக நாடுகளின் மீது திணிப்பதன்மூலம் அமெரிக்கா தனது உயா்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முயல்வதாக ரஷியா திங்கள்கிழமை குற்றச்சாட்டியது. ரஷியாவுடன் நெ... மேலும் பார்க்க

புதிய பாதுகாப்பு கவுன்சில்

டெஹ்ரான்: இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் மீது கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது. அந்த கவுன்சிலுக்கு அதிபா் மசூத் பெஸெஷ்கியான் (பட... மேலும் பார்க்க