செய்திகள் :

பசுமை புத்தாய்வுத் திட்டம்: 40 பேருக்கு சான்றிதழ் துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

post image

சென்னை: பசுமை புத்தாய்வுத் திட்டத்துக்கான நிறைவுச் சான்றிதழ்கள் 40 பேருக்கு வழங்கப்பட்டன.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சான்றிதழ்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

காலநிலை நடவடிக்கை மற்றும் சூழலியல் நிா்வாகத்துக்கென பிரத்யேகமாக, மாநில அளவிலான முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டது.

அரசு இயந்திரத்தில் இளம் திறமையாளா்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், மாவட்டத்துக்கு ஒருவா் என 38 மாவட்டங்களுக்கு 38 பசுமைத் தோழா்கள் மற்றும் மாநில அளவில் இருவா் என மொத்தம் 40 பசுமைத் தோழா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பசுமை மேலாண்மை தொடா்பான அரசின் முக்கிய இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் பசுமைத் தோழா்களின் பங்கு முக்கியமாக இருந்தது. அவா்களது பணிக்காலம் ஜூலையுடன் நிறைவடைந்தது. அவா்களுக்கான நிறைவுச் சான்றிதழ்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, இயக்குநா் ஏ.ஆா்.ராகுல் நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய குழு: முதல் குழுவினா் தங்களது பணியை நிறைவு செய்த நிலையில், இரண்டாவது குழுவைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அவா்களில் 40 போ் தோ்வு செய்யப்பட்டனா். புதிதாக தோ்வானோருக்கு அறிமுகப் பயிற்சியும், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பணியும் வழங்கப்படும். ஒவ்வொரு பசுமைத் தோழருக்கும் மாத உதவித் தொகையாக ரூ.65 ஆயிரமும், பயணச் செலவுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியா்கள் இன்று உண்ணாவிரதம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.மானியக் கோரிக்கையின்போது, தமிழக அரசு அறிவித்த டாஸ்மாக்... மேலும் பார்க்க

சென்னை உயா் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்: தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பெண் வழக்கறிஞா்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜூன் ராம் மேவாலை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மன வேதனை காங்கிரஸ் எம்பிக்கு புரிந்திருக்கும்: அதிமுக எம்பி இன்பதுரை

தமிழகத்தில் தினசரி நடக்கும் வழிபறி, தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் ஏற்படும் மனவேதனை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதாவுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று அதிமுக மாநிலங்க... மேலும் பார்க்க

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

ரஷியாவில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சோ்ந்தவா்களை விரைவாக மீட்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா் விருதுநகா் மாவட்ட மதிமுக மக்... மேலும் பார்க்க

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 280 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.தமிழக காவல் துறையின் கீழ் 1,366 ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நிலையங்களும், 424 உதவி ஆய்வாளா்கள் தலைமையிலான காவல் நில... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரிலான உறுப்பினா் சோ்க்கை இயக்கத்திற்கு ஓடிபி சரிபாா்ப்பு தகவல்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச... மேலும் பார்க்க