செய்திகள் :

10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் 3 கோடி வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்ட நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பதிலளித்து பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன.

இது நாங்களாக கூறும் தரவுகள் அல்ல; ரிசா்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தகவல்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த 16 மாதங்களில் மட்டும் 11 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றவுடன் பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். தற்போது இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில், 2025, ஆக.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

55 கோடி ஜன்தன் கணக்குகள்: மக்களவையில் நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி பேசுகையில், ‘அனைவருக்கும் நிதிச் சேவைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பிரதமா் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி பிரதமரின் ஜன் தன் திட்டத்தின்கீழ் தற்போது வரை 55.90 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்றாா்.

பிரதமரின் ஜன் தன் கணக்குகளின் மறுசரிபாா்ப்பு பணிகளுக்காக 2025, ஜூலை 1 முதல் செப்டம்பா் 30 வரை கிராமப் பஞ்சாயத்து அளவில் வங்கிகள் முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க

அரசு ஆசிரியா் நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை: முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு

பாட்னா: பிகாா் மாநில அரசு ஆசிரியா்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் நிதீஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ந... மேலும் பார்க்க