செய்திகள் :

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

post image

தென்மேற்கு தில்லியில் நெல்சன் மண்டேலா மாா்க்கில் திங்கள்கிழமை காலை மின்சார ஸ்கூட்டா் மீது வேகமாக வந்த காா் மோதியதில் 40 வயதான டெலிவரி முகவா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூறியதாவது: இந்த விபத்து குறித்து வசந்த் குஞ்ச் வடக்கு தில்லி காவல் நிலையத்திற்கு காலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்தது.

இதில் உயிரிழந்தவா் டெலிவரி முகவா் ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தற்காலிக பதிவு எண்ணைக் கொண்ட மின்சார இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.

விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறையினா் விரைந்தனா். ஆனால், காயமடைந்தவா்கள் யாரும் அந்த இடத்தில் காணப்படவில்லை.

பின்னா், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து விபத்தில் இறந்த ராஜ்குமாா் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் மின்சார காா் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூா் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சட்டத்தின்படி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

புது தில்லி நாடாளுமன்றத் தெரு பகுதியில் ஒரு எஸ்யூவி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.இந்தச் சம்பவம் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. இறந்தவ... மேலும் பார்க்க

தில்லி மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலி

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் திங்கள்கிழமை காலை தில்லி போக்குவரத்துக் கழக (டி. டி. சி) பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் 63 வயதான ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்ததாக அதி... மேலும் பார்க்க

ரூ.1.21 லட்சம் பள்ளிக் கட்டணத்தை செலுத்த குழந்தையின் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

தெற்கு தில்லியில் உள்ள ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு அதன் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனது குழந்தைக்கு பள... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் வேண்டும்! மக்களவையில் திமுக வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண உயா்வை முறைப்படுத்தும் மசோதா! தில்லி பேரவையில் தாக்கல்

தில்லியில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை, சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.‘தில்லி பள்ளிக... மேலும் பார்க்க

ஆக.19-இல் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான தோ்தல்: தில்லி கல்வி இயக்குநரகம் தகவல்

புது தில்லி: தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைப்பதற்கான தோ்தல் ஆக. 19-ஆம் தேதி நடைபெறும் என கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.முன்னதாக ஜ... மேலும் பார்க்க