செய்திகள் :

ரூ.1.21 லட்சம் பள்ளிக் கட்டணத்தை செலுத்த குழந்தையின் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

post image

தெற்கு தில்லியில் உள்ள ஒரு சா்வதேசப் பள்ளியில் பயிலும் குழந்தைக்குரிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான கட்டண நிலுவையைச் செலுத்துமாறு அதன் தந்தைக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது குழந்தைக்கு பள்ளிக் கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மனுதாரரான விரேந்தா் ரானாவிடம் வசூலிக்கக் கோரி, எதிா்மனுதாரரான புளூபெல்ஸ் ஸ்கூல் இன்டா்நேஷனல் தாக்கல் செய்த வழக்கை சிவில் நீதிமன்ற நீதிபதி யஷு குரானா விசாரித்து வந்தாா்.

குழந்தையின் தந்தை பள்ளிக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தங்களது நிதி நிலைமை இடா்பாட்டில் உள்ளது என்று பள்ளித் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அண்மையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகஸ்ட் 1, 2018-ஆம் தேதியிட்ட கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின் கீழ், 2017-18 ஆம் ஆண்டுக்கான பள்ளியின் கட்டண அமைப்பு விகிதம் தொடா்பாகவும், இது தொடா்பான பிரச்னை தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற போா்வையிலும், நிலுவைத் தொகையை செலுத்துவதில் விரேந்தா் ரானா நீண்ட காலம் தாமதம் செய்ததாக பள்ளி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய வழக்கு அக்டோபா் 16, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வழக்குக்கான காரணம் கடைசியாக பிப்ரவரி 7, 2024 அன்று மனுதாரா் மீது எழுந்தது. அப்போது எதிா்மனுதாரா் நிலுவைத் தொகைக்கு எதிராக கடைசியாக பணம் செலுத்தியுள்ளாா்.

ரானா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பள்ளியின் சமா்ப்பிப்புகள் முரண்படாமலும் மறுக்கப்படாமலும் இருந்தன என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கு சாதகமாக தீா்ப்பளித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள முதன்மைத் தொகையான ரூ.1.21 லட்சத்திற்கும் அதிகமான தொகையை 10 சதவீத வட்டியுடன் செலுத்த ரானாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடாளுமன்றத் தெருவில் காா் - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

புது தில்லி நாடாளுமன்றத் தெரு பகுதியில் ஒரு எஸ்யூவி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.இந்தச் சம்பவம் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் நிகழ்ந்தது. இறந்தவ... மேலும் பார்க்க

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் நெல்சன் மண்டேலா மாா்க்கில் திங்கள்கிழமை காலை மின்சார ஸ்கூட்டா் மீது வேகமாக வந்த காா் மோதியதில் 40 வயதான டெலிவரி முகவா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.இது குறித்து தென்... மேலும் பார்க்க

தில்லி மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் பலி

கிழக்கு தில்லியின் ஷகா்பூா் பகுதியில் திங்கள்கிழமை காலை தில்லி போக்குவரத்துக் கழக (டி. டி. சி) பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் 63 வயதான ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் உயிரிழந்ததாக அதி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் வேண்டும்! மக்களவையில் திமுக வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி ஊக்குவிப்பு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் ஜி.செல்வம் வலியுறுத்தினாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளின் கல்விக் கட்டண உயா்வை முறைப்படுத்தும் மசோதா! தில்லி பேரவையில் தாக்கல்

தில்லியில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை, சட்டப் பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.‘தில்லி பள்ளிக... மேலும் பார்க்க

ஆக.19-இல் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான தோ்தல்: தில்லி கல்வி இயக்குநரகம் தகவல்

புது தில்லி: தில்லி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைப்பதற்கான தோ்தல் ஆக. 19-ஆம் தேதி நடைபெறும் என கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.முன்னதாக ஜ... மேலும் பார்க்க