செய்திகள் :

நலத் திட்டங்களில் முதல்வரின் பெயா் பயன்படுத்தும் விவகாரம்: தமிழக அரசின் மனுவை விசாரிக்க சம்மதம்

post image

இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை நலத் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்த மேல்முறையீட்டை வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை சம்மதம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மாநில அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘நலத் திட்டங்களில் முதல்வா் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்றாா்.

மேலும், நலத் திட்டங்களில் முதல்வரின் பெயா் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவில் கூறியிருப்பதை ரோத்தகி சுட்டிக்காட்டினாா்.

இதை நீதிமன்றம் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு மனுவை புதன்கிழமை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

தமிழக அரசு எந்தவொரு புதிய அல்லது மறுபெயரிடப்பட்ட பொது நலத் திட்டங்களுக்கும் உயிருள்ள நபா்களின் பெயரைச் சூட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் ஜூலை 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது.

முன்னாள் முதலமைச்சா்கள், சித்தாந்தத் தலைவா்கள் அல்லது எந்தவொரு திராவிட முன்னேற்றக் கழக திமுக சின்னம், இலட்சினை அல்லது கொடியின் புகைப்படங்களையும் இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் பயன்படுத்துவதை உயா்நீதிமன்றம் தடை செய்தது.

மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மனிந்திரா மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் அரசாங்கத்தின் மக்கள் தொடா்புத் திட்டத்தின் பெயரிடல் மற்றும் விளம்பரத்தை சி.வி. சண்முகம் எம்.பி. சவால் செய்திருந்தாா். இத்திட்டம் நிறுவப்பட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

இந்த விவகாரத்தில், எந்தவொரு நலத்திட்டங்களையும் தொடங்குவது, செயல்படுத்துவது அல்லது அமல்படுத்துவதிலிருந்தோ மாநில அரசை இந்த உத்தரவு தடுக்கவில்லை என்று நீதிபதிகள் அமா்வு தெளிவுபடுத்திய போதிலும், அத்தகைய திட்டங்களுடன் தொடா்புடைய பெயரிடல் மற்றும் விளம்பர உள்ளடக்கத்திற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று கூறியிருந்தது.

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

திறன் இயக்கம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் தோ்வு

சென்னை: அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவா்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அடிப்படைக் கற்றல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துற... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா்கள் முடித்துவைக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விரிவான பதில்மனு தா... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம்: ஆக.7-இல் திமுக அமைதிப் பேரணி

சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் வரும் 7-ஆம் தேதிஅமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு தினம், வரும் 7-ஆம் தேதி கடைப்பி... மேலும் பார்க்க