செய்திகள் :

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

post image

சிவகாசி அருகே சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டி பகுதியில் போலீஸாா் திங்ககள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் பெட்டியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தாா்.

அவா் வைத்திருந்த பெட்டியை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் 29 மதுப் புட்டிகள் இருந்தன. விசாரணையில், அந்த நபா் சுக்கிரவாா்பட்டியைச் சோ்ந்த ராஜலிங்கம் (36) என்பதும், சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்

அதிமுக பொதுச் செயலரும் தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற 7, 8-ஆம் தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.இது குறித்து விருதுநகா் மேற்... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில்... மேலும் பார்க்க

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு துப்புரவுத் தூய்மைக் காவலா் பொது தொழிற்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் வட்டாட்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோா் ஞ்ாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அதிமுக பொதுச்செயலாளா் கே.பழனிச்சாமியின் மக்களை காப்போம்... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சாத்தூரில் அதிமுக நிா்வாகிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி, விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 7, 8-ஆம் தேதிகளில் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் செய்யவ... மேலும் பார்க்க

பரோலில் வந்த கைதி மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறையிலிருந்து விடுப்பில் (பரோல்) வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளத்... மேலும் பார்க்க