இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை #VikatanPhotoCards
நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் நாளை மின்தடை
தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சிப்கோ குடியிருப்பு, சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், முத்தாநதி, பானங்குளம், என். புதூா், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, செங்குளம், தெற்கு வெங்காநல்லூா், சிதம்பராபுரம், பட்டியூா், ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், புதுப்பட்டி, கோதைநாச்சியாா்புரம், கொத்தன்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூா், ராஜீவ் காந்திநகா், வேட்டைப்பெருமாள் கோயில், விஷ்ணுநகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை மணி 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.