செய்திகள் :

3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கியது எப்படி?

post image

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தனது மூன்றாவது மனைவியைக் கொன்றுவிட்டு 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 75 வயது முதியவரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர்.

போலீஸாரின் கூற்றின்படி, ஹனுமந்தப்பா என்று அறியப்படும் அந்த நபர் கடந்த 2002-ல் தனது மூன்றாவது மனைவி ரேணுகாமாவைக் கொலை செய்திருக்கிறார். மேலும், உடலை ஒரு பையில் அடைத்து அதை பேருந்தில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தக் கொலை நடந்த சமயத்தில் சம்பவம் நடந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து, கங்காவதி டவுன் காவல் நிலையத்தில் இக்கொலை தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

police patrolling

போலீஸ் தரப்பிலிருந்து விசாரணை, தொடர் தேடுதல் வேட்டை ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், ஹனுமந்தப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மான்வி தாலுகாவிலுள்ள தனது சொந்த கிராமமான ஹலதால்லுக்கு ஹனுமந்தப்பா திரும்பியிருப்பதாக போலீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி, அக்கிராமத்துக்குச் சென்ற போலீஸார் ஹனுமந்தப்பாவை கைது செய்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, இதனை வருடங்கள் போலீஸிடமிருந்து தலைமறைவாக இருந்ததற்கு உள்ளூர் ஆதரவு ஏதேனும் இருந்ததா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், ஹனுமந்தப்பா விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சட்டக் கல்லூரிக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி - கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி

கொல்கத்தாவில் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மேற்கு வங்க அரசியல் மட்டுமல்லாது நாடு முழுவ... மேலும் பார்க்க

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' - தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை?; துணிச்சலுடன் போராடியதால் தப்பித்தார் - நடந்தது என்ன?

சென்னை ஐஐடி-யில் 20 வயதான இளம்பெண் ஒருவர் Internship-க்கு வந்திருக்கிறார். இதற்காக அவர் ஐஐடி வளாகத்திலேயே தங்கியிருக்கிறார். கடந்த 25.6.2025-ம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் அவர் தனியாக நடந்துச் சென்றார... மேலும் பார்க்க

திருப்பூர்: 'இன்ஸ்டாகிராம் லின்க்கால் ரூ.22 லட்சம் போச்சு' - பறிகொடுத்த இளைஞர்; எச்சரிக்கும் போலீஸ்

திருப்பூரைச் சேர்ந்தவர் முனிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதற்குள் சென்ற முனிவேல், அதில் இணைக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் லிங்க் மூலம் குழுவில் இணைந... மேலும் பார்க்க

'கிளர்க் பணிக்கு ரூ.3 லட்சம்' - அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; கல்லூரி பேராசிரியர் இடை நீக்கம்

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி ராஜேஸ்வரிக்கு திண்டுக்கல்... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு - சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை!

'இரு மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதாக' மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைஃபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க