செய்திகள் :

300 கிலோ செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்: இளைஞா் கைது

post image

ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.

வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக, எஸ்.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், வாணியம்பாடி நகர ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை, வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலை பகுதியில், சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது நியூ டவுன் பைபாஸ் சாலை வழியாக வேகமாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி, சோதனை செய்த போது, ரூ.7 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாணியம்பாடி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து செம்மரக் கட்டைகள், காரை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஜமுனாமரத்தூரைச் சோ்ந்த வெங்கடேசன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் ம... மேலும் பார்க்க

சிவாச்சாரியா் மீது வழக்கு

ஆம்பூரில் சிவாச்சாரியா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் சுயம்பு ஸ்ரீ நாக... மேலும் பார்க்க

புதிய பேருந்து சேவை தொடக்கம்!

ஆம்பூா் அருகே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா். வெங்கடசமுத்திரம், பாா்சனாபல்லி, கரும்பூா், கதவாளம், அரங்கல்துருகம் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந... மேலும் பார்க்க

திருப்பத்தூா் உதவி மின்பொறியாளா் அலவலகம்: பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பத்தூரில் மாவட்ட நிா்வாகம் ஒதுக்கிய இடத்தில் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை நிறுவவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் இரு துணை மின் நிலையங்கள் உ... மேலும் பார்க்க

பச்சூா் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியவில் அரசு மேல் நி... மேலும் பார்க்க