செய்திகள் :

300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!

post image

இந்திய அணியின் விராட் கோலி அவரது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இன்றையப் போட்டி விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடும் 300-வது ஒருநாள் போட்டியாகும்.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!

இந்திய அணிக்காக விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 51 சதங்கள் விளாசியுள்ள அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

இந்திய அணியை விராட் கோலி 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டாமிடம் பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி வரை முன்னேறியது.

7-வது இந்திய வீரர்

இந்திய அணிக்காக 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 7-வது வீரர் என்ற பெருமை விராட் கோலியைச் சேரும். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சர்வதேச கிரிக்கெட்டில் 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 22-வது வீரர் என்ற பெருமை அவரைச் சேரும்.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சாதனை!

இந்திய அணிக்காக 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இந்திய வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

300-வது போட்டியில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்த நியூசி; அரையிறுதியில் ஆஸி.யை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளை... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் வேக... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்... மேலும் பார்க்க

திணறிய டாப் ஆர்டர், காப்பாற்றிய மிடில் ஆர்டர்; நியூசி.க்கு 250 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கேரளத்தை வீழ்த்தி விதர்பா சாம்பியன் பட்டம் வென்றது.ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க