செய்திகள் :

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

post image

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதன் பின், காயம் காரணமாக அவரால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆர்ச்சர், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிக்க: விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!

டெஸ்ட்டில் விளையாட ஆர்வம்

இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

பிரண்டன் மெக்கல்லம் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் சரியாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் அபாயம் இருப்பதை கவனத்தில் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அணியின் வேகப் பந்துவீச்சு வரிசையில் அவர் இணைந்தால், இங்கிலாந்து அணியின் வலிமை மேலும் கூடும் என்றார்.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி வருகிற மே 22 ஆம் தேதி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பின், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஷஸ் தொடரிலும் விளையாடவுள்ளது.

வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்த நியூசி; அரையிறுதியில் ஆஸி.யை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளை... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்... மேலும் பார்க்க

திணறிய டாப் ஆர்டர், காப்பாற்றிய மிடில் ஆர்டர்; நியூசி.க்கு 250 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இ... மேலும் பார்க்க

300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!

இந்திய அணியின் விராட் கோலி அவரது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கேரளத்தை வீழ்த்தி விதர்பா சாம்பியன் பட்டம் வென்றது.ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க