செய்திகள் :

ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல் எடை அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ரோஹித் சர்மா சிறந்த ஆட்டக்காரர் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “ரோஹித் உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். அதேபோல, இந்திய கேப்டன்களில் தகுதியில்லாத கேப்டன் இவர்தான்” என்று பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது பதிவு

அவர் ஒரு சாதாரண வீரர். சாதாரண கேப்டன். அதிர்ஷ்டத்தால் இந்திய அணியின் கேப்டனாகி விட்டார்” என விமர்சித்தார்.

அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மட்டுமின்றி பாஜகவினரிடமும் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவை ஷாமா நீக்கிவிட்டார்.

இதையும் படிக்க | 2025 ஆஸ்கர் விருதுகள்... முழு பட்டியல் விவரம்!

அவரது இந்தக் கருத்துக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”இதற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். இப்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் கேப்டனைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள். இந்திய அரசியலில் தோல்வியடைந்த ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாட வருவார் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவினர் பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஷாமா விளக்கமளித்துள்ளார். அதில், “அது ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி குறித்த பொதுவான ட்வீட். உடலைக் கேலி செய்யவில்லை. ஒரு விளையாட்டு வீரர் முழு உடற்தகுதியுடன் இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். எனவே அதுபற்றி ட்வீட் செய்தேன். எனக்கு அதற்கான உரிமை உள்ளது. அதில் என்ன தப்பு? அதுதான் ஜனநாயகம்” என்று தெரிவித்தார்.

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க