செய்திகள் :

விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!

post image

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி இந்திய அணிக்காக விராட் கோலி விளையாடும் 300-வது ஒருநாள் போட்டியாகும்.

இதையும் படிக்க: 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!

விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நம் அனைவருக்கும் பதிலளிப்பதாக நினைக்கிறேன். உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை. அதன் பின், மீண்டும் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே அவரை மிகப் பெரிய லெஜண்டரி வீரர் எனக் கூறுகிறேன்.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு அனைவராலும் இதுபோன்று விளையாட முடியாது. விராட் கோலியின் போராட்ட குணமும், கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஃபீல்டிங்கில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவது அவர் எந்த அளவுக்கு போட்டியின் மீது ஆர்வமாக இருக்கிறார் என்பதை பிரதிபலிக்கிறது. விராட் கோலி அவர் மீது 120 சதவிகிதம் நம்பிக்கை வைத்துள்ளார் என்றார்.

இந்திய அணிக்காக 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7-வது வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்த நியூசி; அரையிறுதியில் ஆஸி.யை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளை... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து அணியின் வேக... மேலும் பார்க்க

திணறிய டாப் ஆர்டர், காப்பாற்றிய மிடில் ஆர்டர்; நியூசி.க்கு 250 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இ... மேலும் பார்க்க

300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் விராட் கோலி!

இந்திய அணியின் விராட் கோலி அவரது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: விதர்பா 3-வது முறையாக சாம்பியன்!

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கேரளத்தை வீழ்த்தி விதர்பா சாம்பியன் பட்டம் வென்றது.ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க