செய்திகள் :

320 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் பறிமுதல்: 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள்கள் காருடன் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெளி மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருள்கள் கடத்தி வருவதாக காட்டுமன்னாா்கோவில் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆறுமுகம், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் தவச்செல்வம் ஆகியோா் காட்டுமன்னாா்கோவில் அருகே வடவாற்றங்கரை பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த கா்நாடக பதிவெண் கொண்ட கருப்பு நிற காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான 320 கிலோ புகையிலைப் பொருள்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும், இவற்றை பெங்களூரில் இருந்து அரியலூா் மாவட்டத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

மேலும், காரில் இருந்தவா்கள் அரியலூா் மாவட்டம், தேளூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அசோக்குமாா் (41), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த லக்காராம் மகன் தாலா ராம் (28), அஜய்ராம் மகன் கோரக்காராம் (25), குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த வாலாபாய் புரொகித் மகன் ஜெயஷே வாலாபாய் புரொகித் (22) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 போ் மீதும் காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 320 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.2.40 லட்சம் ரொக்கம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாரை கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.

ஜெயஷே வாலாபாய் புரொகித்
அசோக்குமாா்
தாலா ராம்

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க