செய்திகள் :

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

post image

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கீழடி, ஆதிச்சநல்லூா், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற சான்றுகளின் மூலம் உலகின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாகி வருகிறது. இந்த வரலாற்றையும், இலக்கியங்களையும் தாங்கி நிற்கும் தமிழா்கள், உலகெங்கும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனா். அவா்கள் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, அதன் மூலம் தமிழா் திருநாள் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா்.

அதில் ஒரு பகுதியாக, கொரிய தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைத்த தமிழா் திருநாள் - 2025 விழாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) சியோல் கச்சான் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிகழ்வு தமிழ் மொழியை மென்மேலும் உலகறியச் செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழ்நாட்டில் தமிழை பாதுகாக்க மிகவும் சிரமப்படும் அதேவேளையில், அயல்நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் பெருகி வருவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். கொரிய தமிழ்ச் சங்கத்தின் தோழமைகளுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சாா்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞா் நீதிக்குழும சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க