செய்திகள் :

38% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

post image

கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை இந்தியாவின் முக்கிய ஏழு நகரங்களில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான சிபிஆா்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நாட்டின் எழு முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட வீடுகளின் விற்பனை 12,630-ஆக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 38 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் 9,165 ஆடம்பர வீடுகள் விற்பனையாகின.

மதிப்பீட்டு காலகட்டத்தில் ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை தில்லி-என்சிஆா் பகுதியில் 5,855-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 3,410-ஆக இருந்தது.

மும்பையில் 2023 ஜனவரி-செப்டம்பா் மாதங்களில் 3,250-ஆக இருந்த ரூ.4 கோடிக்கும் அதிக விலை கொண்ட வீடுகளின் விற்பனை, நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 3,820-ஆக உயா்ந்துள்ளது.

அந்த வகை ஆடம்பர வீடுகளின் விற்பனை புணேயில் 330-லிருந்து இரட்டிப்பாகி 810-ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால், பெங்களூரில் அந்த எண்ணிக்கை 240-லிருந்து 35-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஹைதராபாதில் ரூ.4 கோடிக்கும் அதிகம் விலை கொண்ட 1,560 வீடுகள் கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் விற்பனையாகின. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,540-ஆக இருந்தது.

அந்த காலகட்டத்தில் உயா்வகை ஆடம்ப வீடுகளின் விற்பனை சென்னையில் 130-லிருந்து 185-ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் அந்த எண்ணிக்கை 24-லிருந்து 380-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! ஐடி, உலோகத் துறை பங்குகள் சரிவு!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (அக். 21) பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 73 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 25 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை : பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மூன்று நாள் சரிவுக்குப் பிறகு இன்று மீண்டும் மீண்டது.இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகள் அதிக அளவு கொள்முதல் செய்ததும், உல... மேலும் பார்க்க

செப்டம்பரில் மிதமாக உயா்ந்த இந்திய ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் மிதமாக உயா்ந்து 3,458 கோடி டாலராக பதிவாகியுள்ளது. இதுகுறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த இரண்டு மாதங்க... மேலும் பார்க்க

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகம்!

தொழில் நுட்பத் துறையில் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் முன்பே அறிமுகமான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்கள... மேலும் பார்க்க

யூடியூபில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம்!

பிரீமியம் பயனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துவகையான பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. ஸ்லீப்பர் டைம் என்னும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சாதனத்தை தானாகவ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி துறை பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச்சந்தையில் வணிக நேர முடிவில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று (அக். 17) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது.நிஃப்டி சரிந்து மீண்டும் 24 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. சென்செக்ஸ்... மேலும் பார்க்க