ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
4 நாள்களுக்கு ரயில் சேவை ரத்தாகிறது!
புதுச்சேரிக்கான ரயில் சேவை 4 நாள்களுக்கு ரத்தாகிறது.
இது குறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அதிகாரி ஆா் வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் வரும் 26, 27, 28 மற்றும் 30 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில் இதே தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் சென்னை- எழும்பூா் புதுச்சேரி பயணிகள் ரயில் வரும் வழியில் தேவையான இடத்தில் 60 நிமிஷங்கள் நின்று செல்லும்.